நிதிபாலன்
சிவலிங்கராஜா மேகேஸ்வரன்
நிகழ்வு
மன்னார் மடு பகுதியில் “ஓயாத அலைகள் - 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு.
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது. ஓயாத அலைகள் - 3 தொடர் நடவடிக்கையின்போது மடுப் பகுதியில் இம்மாவீரர் வீரச்சாவடைந்திருந்தார். எனினும் இவரின் வீரச்சாவு நாள், மற்றும் திங்கள்(மாதம்) என்பன அறியப்படவில்லை. ஓயாத அலைகள் 3 தொடர் நடவடிக்கையில் மடுப் பகுதியில் 20.11.1999 அன்று மாத்திரம் படையினருடன் இடம்பெற்ற சமரில் நான்கு போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டிருந்தனர். ஓயாத அலைகள் தொடர் நடவடிக்கையில் மடுப்பகுதியில் போராளிகளின் வீரச்சாவுகள் எவையும் 20.11.1999ற்கு பின்னரோ அல்லது அதற்கு முன்னரோ இடம்பெறவில்லை. எனவே 20.11.1999 2ம் லெப்டினன்ட் நிதிபாலன் வீரச்சாவைத் தழுவியதாக எண்ணி இந்நாளை அவரின் வீரச்சாவு நாளாகப் பதிவு செய்திருக்கிறோம்.


